பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையங்கள் மூட தீர்மானம்

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து தொலைதூர கல்விமையங்களும் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி கொள்ள சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து தொலைதூர கல்விமையங்களும் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி கொள்ள சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவை மருதமலை அருகே உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த சில தினங்களாகவே சர்ச்சையில் சிக்கி பரபரப்பாக காணப்படுகிறது. போராசிரியர்கள் நியமனத்தில் லஞ்சம் வாங்கப்பட்டதாக கூறி பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி கைது செய்யப்பட்டார். அதன் பின் மார்ச் மாதம் ஜாமினில் வெளிவந்தார். 

அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிண்டிகேட் என்கிற பல்கலைக்கழக ஆட்சிக் குழு மாற்றியமைக்கப்பட்டது. இதனிடையே அக்குழுவின் கூட்டம் தமிழ்நாடு உயர்கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் தலைமையில் மார்ச் 26-ம் தேதி நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பல்கலைக்கழக நலன் கருதி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் தொலைதூரக் கல்வி மையங்கள் மூட இருப்பதும், வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கையில் ஈடுபடக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் குறித்து தமிழ்நாடு சுயநிதியல் கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தை சேர்ந்த மூத்த நீர்வாகி ஒருவர் கூறுகையில், "தொலைதூர கல்வி மையங்கள் என்ற பேரில் தனியார் இன்ஸ்டிட்யூட்கள் பல முறைகேடுகளில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு வகுப்பறையில்லாமலும், சரியான எந்த லேப் வசதிகளும் இல்லாமலும், ஆசிரியர்களும் இல்லாமலும் பெயரளவில் இயங்கி வந்தன. இதனால் மாணவர்களின் எதிர்காலம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இது குறித்து எங்கள் சங்கம் மூலம் பல முறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை. தற்போது இந்த தீர்மானத்தின் மூலம் இதற்கு தீர்வு கிடைத்துள்ளது. இதை தனியார் கல்லூரியின் ஒர் முதல்வராக மாணவர்களின் நலன் கருதி வரவேற்கிறேன். இந்த தீர்மானத்தின் மூலம் மாணவர்களின் கல்வி தரம் உயரும். மாணவர்கள் சரியான சூழ்நிலையில் எல்ல வசதிகளுடன் படித்து வெளியில் வரும் அவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்." என்றார்.

இது குறித்து வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மார்ச் மாதம் 30-ம் தேதி தமிழ்நாடு சுயநிதியல் கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...