அனைத்து வகுப்புகளுக்கும் 2 ஆண்டிற்குள் புதிய பாடத்திட்டம் : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

கோவை: இரண்டு ஆண்டிற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும் எனக் கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


கோவை: இரண்டு ஆண்டிற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும் எனக் கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஸ்டெம் எனப்படும் வெளிநாட்டு நிறுவனம் மற்றும் அக்கல்லூரி இணைந்து நடத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி பட்டறையை இன்று அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "செயல்வழி கற்றல் மூலம் அறிவியல், கணிதம் மற்றும் பொறியியல் பாடங்களை எளிதில் கற்றுக்கொள்வது குறித்து நடத்தப்படும். இந்தப் பயிற்சி பட்டறையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவை, போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள மிகவும் உதவிகரமாக இருக்கும்," எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது :- ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க கல்வியால் மட்டுமே முடியும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தர வேண்டும். 1, 6 ,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல, மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளில் அதற்கான பணிகள் முடிவடையும். 12ஆம் வகுப்பு முடித்தவுடன், வேலைபெறும் வகையில் தரமான புதிய பாடத்திட்டம் அமையும். மேலும், இந்தாண்டு தனியார் பள்ளி சீருடைக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்படும். 

கோவையில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தக் கல்லூரியில் தங்கி நீட் தேர்வு பயிற்சி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து தேர்வுகளையும், மாணவர்கள் எதிர்கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும். என்றார். 

நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "முறைகேடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும். மேலும், பகுதிநேர ஆசிரியர்கள் இடமாறுதல்களுக்கான கலந்தாய்வும் இந்தாண்டு நடத்தப்படும்," என உறுதியளித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...