அரசுப் பொருட்காட்சியில் அரசின் திட்டங்களை விளக்கும் அரங்குகளை அமைக்க உத்தரவு

கோவை : அரசுப் பொருட்காட்சியில் அரசின் திட்டங்களை பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் கண்கவர் அரங்குகளாக அனைத்து அரசுத்துறைகள் சார்பில் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.

கோவை : அரசுப் பொருட்காட்சியில் அரசின் திட்டங்களை பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் கண்கவர் அரங்குகளாக அனைத்து அரசுத்துறைகள் சார்பில் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். 



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 'அரசுப் பொருட்சாட்சி-2018' நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் அனைத்து அரசு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது :- தமிழ்நாடு அரசின் சார்பில் கோவை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசுப்பொருட்காட்சி செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு ஏப்ரல் 15 -ம் தேதி துவங்கப்படும் இப்பொருட்காட்சியானது தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இப்பொருட்காட்சியில், அரசின் 27 அரசுத் துறைகளுக்கு தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்துப் பயன்பெறும் வண்ணம் அரங்குகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், கோவை மாநகராட்சி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிராம கைத்தொழில் வாரியம், கோ-ஆப்டெக்ஸ், ஆவின், தாட்கோ, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு உப்பு நிறுவனம், தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசன் லிட், தமிழ்நாடு எரிசக்தி முகமை, ஆகிய 12 அரசு சார்பு நிறுவனங்களுக்கும் இப்பொருட்காட்சியில் பங்கேற்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இத்துறைகள் அனைத்து அரசு துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், தங்கள் துறையால் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்களைக் காட்சிப்படுத்தும் வகையிலும் கண்கவர் அரங்குகளாகவும், காண்போரை ஈர்க்கும் வகையிலும் அமைக்க வேண்டும். எனவே, கோவை மாவட்டம் சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெறும் அரசுபொருட்காட்சியில் தமிழ்நாடு அரசின் திட்டங்களை அறிந்துகொள்வது மட்டுமின்றி கோடை காலத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய பல்வேறு விளையாட்டு சாதனங்களும், வீட்டு உபயோகப்பொருட்களும், பல்வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப்படவுள்ளது. 

எனவே, இந்த அரிய வாய்ப்பைப் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு பொதுமக்களும் வருகைபுரிந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, இவ்வாறு கூறினார். 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...