தமிழ்நாடு மத்திய பல்கலை., கேண்டீனில் தடை செய்யப்பட்ட நச்சுப் பொருள் பறிமுதல்

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் கேண்டீனில், விடுதி உணவு சங்க உறுப்பினர்கள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட நச்சுத்தன்மை கொண்ட பொருளை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் கேண்டீனில், விடுதி உணவு சங்க உறுப்பினர்கள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட நச்சுத்தன்மை கொண்ட பொருளை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மத்திய அரசு சார்பில் செயல்பட்டு வரும் 7 பல்கலைக்கழகங்களில், திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகமும் ஒன்று. 

இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தின் கேண்டீனில், மாணவர்கள் உணவு கொள்வது வழக்கம். இந்த நிலையில், தமிழக விடுதி உணவு சங்க உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்தின் கேண்டீனில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட நச்சுத் தன்மை வாய்ந்த மோனோ சோடியம் குளுடமேட் என்ற கெமிக்கல் பவுடரின் 8 பாக்கெட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது உணவுப் பொருட்களின் சுவையை மிகைப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது. 



இது தொடர்பாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவன் கூறும்போது, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இருக்கும் கேண்டின் நிர்வாகம், மாணவர்களுக்கு கெமிக்கல் இல்லாத உணவுகளே வழங்கப்படுவதாக உத்தரவாதம் கொடுத்திருந்தாலும், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன," எனக் கூறினார்.

பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள இந்தக் கேண்டினில் சுகாதாரமற்ற உணவுகளையே வழங்கப்படுவதாக பலமுறை புகார் அளித்தும், இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

 

ஏற்கனவே, மேகியில் நச்சுத் தன்மை மிகுந்த எம்.எஸ்.ஜி., என்ற வேதிப் பொருள் அதிகம் இருந்ததால், அதற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...