சிறப்பு வகுப்பிற்கு சென்ற தனியார் பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்

திருப்பூர் : திருப்பூரில் அரசு விதிமுறைகளை மீறி தனியார் மெட்ரிக் பள்ளியால் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்பிற்கு சென்ற 10-வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

திருப்பூர் : திருப்பூரில் அரசு விதிமுறைகளை மீறி தனியார் மெட்ரிக் பள்ளியால் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்பிற்கு சென்ற 10-வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்தார். 

செட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் அகிலன் என்ற மாணவன் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது, பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், அகிலன் உள்ளிட்ட சில மாணவர்களுக்கு அரசு விதிமுறைகளை மீறி நேற்று பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்போது, நேற்று மாலை ஐந்து மணியளவில் மாணவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி பள்ளியில் இருந்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

இதனையடுத்து, பள்ளிக்கு விரைந்து சென்ற பெற்றோர்கள் மாணவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாணவன் அகிலன் இன்று அதிகாலை உயிரிழந்தார். 

இது தொடர்பாக உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் கூறியதாவது :- பள்ளிக்கு செல்லும் பொழுது உடல்நிலை நன்றாக இருந்தது. பள்ளியில் நிகழ்ந்த ஏதோ ஒரு சம்பவத்தின் காரணமாக மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளான். இவ்வாறு கூறினார். மேலும், கடந்த 10 நாட்களுக்கு முன் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அகிலனை மட்டும் அடித்துள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...