ரஜினி-கமல் படங்களை கர்நாடகத்தில் திரையிட விட மாட்டோம் - வாட்டாள் நாகராஜ்

பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆதரவு தெரிவித்து வரும் ரஜினி-கமல் திரைப்படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆதரவு தெரிவித்து வரும் ரஜினி-கமல் திரைப்படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தமிழகத்தில் தலை தூக்கியுள்ளது. ஆளும் கட்சி முதல், எதிர்க் கட்சி, பிற கட்சிகள் மற்றும் அமைப்புகள் வரை அனைத்துத் தரப்பினரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இன்று தமிழகத்தில் முழு அடைப்புக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்துள்ளனர். பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனின் திரைப்படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், "காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருவது கண்டிக்கத்தக்கது. எந்த காரணத்தை கொண்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது.

இன்று தமிழ்நாட்டில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பதிலடியாக கர்நாடகத்திலும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவோம். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நாங்கள் கண்டிக்கிறோம்.

காவிரி பிரச்சினையில் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் கர்நாடக மாநிலத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் படங்களை கர்நாடக மாநிலத்தில் திரையிட விட மாட்டோம்." என்றார்.

ரஜினியின் ‘காலா’ படம் வருகிற 27-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்த ‘2.0’ படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படங்கள் கர்நாடகத்தில் வெளியாகுமா? என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...