கோவையில் மது போதையில் போராட்டம்: நேற்று அ.தி.மு.க..! இன்று தி.மு.க..!

கோவை: கோவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதான தி.மு.க.வினர், மது வேண்டி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

கோவை: கோவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதான தி.மு.க.வினர், மது வேண்டி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, தி.மு.க. சார்பில் கோவை கணபதி பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பாய், தலையணையுடன் குடியேறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கைதாகி அருகில் இருந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது, வெளியிலிருந்து மது வாங்கிவிட்டு மண்டபத்திற்குள் நுழைந்த வாகனத்தை போலீசார் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால், கொதித்துப் போன தி.மு.க.வினர் போலீசாருடன் பயங்கரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

"ஒரு சில மண்டபத்தில் மதுவுடன், பிரியாணி் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு மட்டும் ஏன் மறுக்கிறீர்கள்?" என்று தி.மு.க-வை சேர்ந்த ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



"போராட்டங்கள் முடிந்து கைதாவதும், மது குடிப்பதும் சர்வ சாதாரணம்" என அங்குள்ள மற்ற தி.மு.க-வினர் சத்தமிடுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 



இறுதியாக, மண்டபத்திற்கு வரும் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், வாக்குவாதத்தில் ஈடுபடும் தி.மு.க-வினரை சமாதானம் செய்து மதுவை உள்ளே கொண்டு வர அனுமதிப்பதாகக் கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் நேற்று முன்தினம் கோவையில் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தின் இடையே அக்கட்சி தொண்டர்கள் மதுபானம் குடிக்க படையெடுத்த நிலையில், இன்று தி.மு.க தொண்டர்கள் மதுபானத்திற்காக சண்டையிடும் காட்சிகள், உணர்வுப்பூர்வமாக போராட்டம் நடத்தியவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...