கூட்டுறவு சங்கத் தேர்தலை முறையாக நடத்தாத தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை முறையாக நடத்தாத தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை முறையாக நடத்தாத தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

உதகையில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். கூட்டுறவு சங்கத் தேர்தல் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பணியாற்றிய ஊழியர்களை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் பணியை செய்ய விடாமலும், மிரட்டியும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். 

இதனையடுத்து, தேர்தலின் போது சில இடங்களில் ஊழியர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. எனவே, இதுபோன்ற அரசு பொதுவேலைகளில் பணியாற்றும் போது தங்களுக்கான பாதுகாப்பை அரசு ஏற்படுத்த வேண்டும், தேர்தல் நடக்கும் போது முறையான வகையில், பாதுகாப்பாக தேர்தலை நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...