சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் உற்சவ திருவிழா 15-ம் தேதி தொடக்கம்

கோவை : சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் 49-வது உற்சவ திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கோவை : சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் 49-வது உற்சவ திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள ஐயப்பன் கோவில் இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலின் 49-வது உற்சவ திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

இது தொடர்பாக நிர்வாகிகள் கூறுகையில், "வரும் 15-ம் தேதி சித்திரை கனி திருநாளன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் உற்சவ திருவிழா தொடங்க உள்ளது. 

தொடர்ந்து, 16-ம் தேதி சிறப்பு பூஜைகளும், அன்று மாலை இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. 17-ம் தேதி காலை களபாபிஷேக சிறப்பு பூஜைகளும், 18-ம் மற்றும் 19-ம் தேதிகளில் சிறப்பு பூஜைகளும், 20-ம் தேதி உற்சவ பலி, சிறப்பு தரிசனம், ஸ்ரீ சக்கர பூஜை, கோமாதா பூஜை ஆகியன நடைபெறும்.

21-ம் தேதி காலை 6.30-க்கு தீபாரதனைக்குப் பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன் சுவாமி செண்டை மேளம், பஞ்சவாத்தியம் முழங்க ஆவரம்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு, ஐய்யப்பன் கோவிலுக்கு வந்தடையும். 

மேலும், 22-ம் தேதி மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஐந்து யானைகளுடன் காவடியாட்டம், தெய்யம், பூதன் திறை, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்துடன் நகர்வலம் நடைபெற்று, ஐந்து யானைகளுடன் ஆறாட்டு திருவீதி உலாவுடன் நிறைவடையும்." என்றனர்.

Newsletter

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...