கோவையில் மூன்று கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

கோவை : முறையற்ற விநியோகத்தால் ஆறு மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகக் கூறி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மூன்று கிராம மக்கள் இன்று காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : முறையற்ற விநியோகத்தால் ஆறு மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகக் கூறி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மூன்று கிராம மக்கள் இன்று காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பெட்டதாபுரம், மத்தம்பாளையம், பிளிச்சி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 

மாதம் ஓரிரு முறை மட்டுமே குறைந்த அளவில் குடிநீர் வழங்கப்படுவதால் இக்கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குற்றம் சாட்டும் கிராம மக்கள், அப்பகுதிகளில் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாகவும், அதனை சரி செய்து சீராக குடிநீர் வழங்க கோரி பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர். 

மேலும், இக்கிராமங்களில் போடப்பட்டிருந்த ஆழ்குழாய் கிணறுகளும் பராமரிப்பின்றி பழுதடைந்து கிடப்பதால் கோடைக்காலத்தில் தண்ணீரின்றி தவித்த மக்கள் இன்று கோவை-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சுமார் மூன்று மணிநேரம் நீடித்த இந்த மறியல் போராட்டம் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மணி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...