ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியை மீட்டெடுத்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை

கோவை: கோவையில் ரயில் நிலையத்தில் கடந்த 13-ம் தேதி சுயநினைவை இழந்த முதியவர் ஒருவர், கை மற்றும் முகத்தில் காயங்களுடன் கிடந்தார். இது குறித்து தகவலறிந்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை அந்த முதியவரை மீட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு காப்பகத்திற்கு அழைத்துச் சென்றது. தொடர்ந்து, அவரிடம் இருந்த ஆவணங்களைச் சோதித்து பார்த்ததில் அவர் டெல்லியைச் சேர்ந்த லக்ஷ்மன் (87) என்பதும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி என்பதும் தெரியவந்தது. அந்த முன்னாள் அதிகாரியை அவரது குடும்பத்திற்கு மீட்டுக் கொடுத்துள்ளது ஈர நெஞ்சம் அறக்கட்டளை.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் கடந்த 13-ம் தேதி சுயநினைவை இழந்த முதியவர் ஒருவர், கை மற்றும் முகத்தில் காயங்களுடன் கிடந்தார். இது குறித்து தகவலறிந்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை அந்த முதியவரை மீட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு காப்பகத்திற்கு அழைத்துச் சென்றது. தொடர்ந்து, அவரிடம் இருந்த ஆவணங்களைச் சோதித்து பார்த்ததில் அவர் டெல்லியைச் சேர்ந்த லக்ஷ்மன் (87) என்பதும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி என்பதும் தெரியவந்தது. அந்த முன்னாள் அதிகாரியை அவரது குடும்பத்திற்கு மீட்டுக் கொடுத்துள்ளது ஈர நெஞ்சம் அறக்கட்டளை.

இது குறித்து ஈர நெஞ்சம் மகேந்திரன் கூறுகையில், " மேட்டுப்பாளையத்தில் உள்ள முதியோருக்கான தாங்கும் விடுதி ஒன்றில் லக்ஷ்மன் இருந்துள்ளார். டெல்லி செல்வதற்காக கோவை ரயில் நிலையம் வந்த போது அவர் வழி தவறி சென்றிருக்கிறார். அவரை ரயில் நிலைய காவலர்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தோம். தொடர்ந்து, அவரது கைப்பையில் இருந்த துண்டு சீட்டுகளைப் பார்த்த போது அவரது மகள் கலா டெல்லியில் இருப்பது தெரியவந்தது. அவருக்குத் தகவல் கொடுத்தோம். கோவை வந்த அவர், தனது தந்தை ஒரு ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி என்றும், அவரை மீட்டுக் கொடுத்ததற்கு நன்றியையும் தெரிவித்தார். பின்னர், அவரை பத்திரமாக டெல்லிக்கு அனுப்பி வைத்தோம்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, தற்போது வரை ஆதரவின்றி இருந்த முதியோர்கள் சுமார் 35 பேரை மீட்டு அவர்களது குடும்பத்தினரிடையே ஒப்படைத்துள்ளோம்." என்றார்.

முதியவரை மீட்டு குடும்பத்திடம் ஒப்படைத்த ஈர நெஞ்சம் மகேந்திரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...