கர்நாடக காய்கறிகள் வரத்து அதிகரிப்பு : நீலகிரி காய்கறிகள் விலை சரிவு

நீலகிரி: காய்கறி விளைச்சல் அதிகரிப்பு மற்றும் கர்நாடகாவிலிருந்து வரத்து அதிகரித்துள்ளதால், நீலகிரி மாவட்ட காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது.


நீலகிரி: காய்கறி விளைச்சல் அதிகரிப்பு மற்றும் கர்நாடகாவிலிருந்து வரத்து அதிகரித்துள்ளதால், நீலகிரி மாவட்ட காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு, தென் மேற்கு பருவ மழை மற்றும் வட கிழக்கு பருவ மழை ஓரளவு பெய்தது. இதனால், மாவட்டத்தில் முக்கிய பயிர்களான உருளைக் கிழங்கு, கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டன. இதன் காரணமாக காய்கறிகளின் வரத்து அதிகரித்தது. இதனால் கடந்தாண்டு உச்சம் தொட்ட காய்கறிகளின் விலை இந்தாண்டு கடுமையாக சரிந்துள்ளது.



மேலும், கர்நாடகா மாநிலத்திலிருந்து காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் நீலகிரியில் விளையும் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. இதனால், வியாபாரிகள் காய்கறிகளை வாகனங்களில் ஏற்றி, கிராமந்தோறும் விற்பனை செய்து வருகின்றனர். உதகை, கூடலூர் மார்க்கெட்டுக்கு கர்நாடகா மாநிலம் குண்டல்பெட்டிலிருந்து காய்கறி வரத்து வரும் நிலையில், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் வியாபாரிகள் மேட்டுப்பாளையத்திலிருந்து காய்கறி கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளிலிருந்து மொத்தமாக காய்கறிகளை வாங்கிக்கொண்டு, கோத்தகிரி வரும் வழி நெடுகிலும் உள்ள கிராமங்கள் முதல் குக்கிராமங்களை வரை காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். விலை சரிவு குறித்து தினசரி சந்தை வியாபாரிகள் கூறுகையில், "கடந்தாண்டு சராசரி மழை பெய்ததால், காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைந்துள்ளது. முக்கிய காய்கறிகளான உருளைக் கிழங்கு கிலோ ரூ.20-24, பீட்ரூட் ரூ.13-க்கு விலை போனது. கடந்த மாதம் ரூ.70க்கு விலை கேரட், தற்போது ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



முட்டைக்கோஸ் கிலோ ரூ.15-க்கு, பீன்ஸ் கிலோ ரூ.20, பட்டாணி கிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்ததால் பெரும்பாலானோர் காய்கறிகளை அறுவடை செய்தனர். இதனால், வரத்து அதிகரித்தது. மேலும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் காய்கறி வரத்து அதிகரித்த காரணத்தால் விலை குறைந்து விட்டது." என்றனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...