"பெண்கள் இருக்காங்க, உள்ளே வராதீங்க": பா.ஜ.க-வினரை விரட்டும் கேரள குடியிருப்புகள்

கோவை: 'நாய்கள் ஜாக்கிரதை', 'இங்கு அசுத்தம் செய்யாதீர்கள்', 'வாகனங்களை கேட்டின் முன்பு நிறுத்தாதீர்கள்' போன்ற வாசகங்கள் வீட்டின் வாயில்களில் எழுதி வைக்கப் பார்த்திருப்போம். ஆனால், கேரளா மக்கள், 'பெண்கள் இருக்காங்க, பா.ஜ.க-வினர் ஓட்டு கேட்டு உள்ளே வராதீர்கள்' என்று எழுதி வைத்து ஒரு புரட்சியை தொடங்கியுள்ளனர்.

கோவை: 'நாய்கள் ஜாக்கிரதை', 'இங்கு அசுத்தம் செய்யாதீர்கள்', 'வாகனங்களை கேட்டின் முன்பு நிறுத்தாதீர்கள்' போன்ற வாசகங்கள் வீட்டின் வாயில்களில் எழுதி வைக்கப் பார்த்திருப்போம். ஆனால், கேரளா மக்கள், 'பெண்கள் இருக்காங்க, பா.ஜ.க-வினர் ஓட்டு கேட்டு உள்ளே வராதீர்கள்' என்று எழுதி வைத்து ஒரு புரட்சியை தொடங்கியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமியை கோயிலுக்குள் அடைத்துவைத்து, காவல் துறை அதிகாரி உள்பட 8 பேர் மயக்க மருந்து கொடுத்து அந்த சிறுமியை 3 நாட்கள் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த மிருகத்தனமான செயல்களில் ஈடுபட்டவர்கள் பா.ஜ.க-வினர் என்பது அடுத்தடுத்த விசாரணையில் அம்பலமாக அம்மாநிலத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராக பொதுமக்கள் திரும்பினர். 



இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக அம்மாநில அமைச்சர்களே ஊர்வலம் நடத்தினர். அந்த சம்பவம் சிறுமியை இழந்த வேதனையில் தவித்த காஷ்மீர் மக்களுக்கு ஆத்திரத்தை ஊட்டியது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும், அந்த சிறுமியின் மரணத்திற்காக நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கேரள மக்கள் நூதன முறையில் பா.ஜ.க-வினருக்கு 'பளார்' கொடுத்துள்ளனர்.

கேரள மாநிலம் செங்கன்னூரில், 'வீட்டில் 10 வயதில் சிறுமி இருக்கிறாள், வராதீர் : ஓட்டு கேட்டு வரும் பாஜக-வினர் கேட்டின் வெளியே நிற்கவும்' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. செங்கன்னூர் தொகுதியில் உள்ள வீடுகள் முழுக்க இது போன்ற வாசகங்கள் அடங்கிய நோட்டிஸ்களை காண முடிந்தது.

இன்னும் சில வீடுகளில், 'இங்கு நிறைமாத கர்ப்பிணி இருக்கிறார். அதனால், பா.ஜ.க-வினர் உள்ளே வரக்கூடாது.' என்று எழுதப்பட்டிருந்தது. "ஒரு சில இளைஞர்கள் தொடங்கிய இந்த போஸ்டர் முறை தற்போது அனைத்து தரப்பினராலும் கடைபிடிக்கப்படுகிறது. இதில் அரசியல் தலையீடு இல்லை." என்கிறது செங்கன்னூர் தொகுதியில் அசைக்க முடியாத பலம் பெற்ற சி.பி.எம். கட்சி வட்டாரம்.

வெளியில் தலைகாட்ட கூச்சப்படும் அளவிற்கு கடுமையான விமர்சனங்களால் நொந்து போன பா.ஜ.க-வினர், "கடந்த சி.பி.எம் கட்சியை சேர்ந்த ஒருவர் 28 வயதான நிறைமாத கர்ப்பிணியை வயிற்றில் எட்டி உதைத்தார். அதனால், அந்த பெண்ணின் கரு கலைந்தது. ஆதலால், கர்ப்பிணிப் பெண்கள் உள்ள வீடுகளில் அக்கட்சியினர் நுழையக் கூடாது என்று நாங்கள் எழுதி வைத்தோம். போஸ்டர் சண்டை இங்கு புதிதல்ல." என்கிறது பா.ஜ.க. வட்டாரம்.



செங்கன்னூரில், இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவ்வாறு போஸ்டர் சண்டைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...