அ.தி.மு.க., ஆட்சியில் கோவை மாவட்டம் பின்தங்கியுள்ளது : தி.மு.க., எம்.எல்.ஏ., நா. கார்த்திக்

கோவை : அ.தி.மு.க., ஆட்சியில் ஒட்டமொத்த வளர்ச்சியில் கோவை மாவட்டம் பின் தங்கியிருப்பதாக தி.மு.க., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக் தெரிவித்தார்.

கோவை : அ.தி.மு.க., ஆட்சியில் ஒட்டமொத்த வளர்ச்சியில் கோவை மாவட்டம் பின் தங்கியிருப்பதாக தி.மு.க., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக் தெரிவித்தார். 

பீளமேடு பகுதியில் உள்ள பூங்காவை தெற்கு மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் எம்.எல்.ஏ., இன்று ஆய்வு மேற்கொண்டார். பூங்காவில் புதர்கள் மண்டியும், சிறுவர் விளையாட்டு சாதனங்கள் சேதம் அடைந்திருப்பதையும் பார்வையிட்டார். 

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், "கடந்த 2010-ம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின்போது, கோவை மாநகராட்சி முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டது. இந்த பூங்காக்களும், பழைய பூங்காக்களையும் சேர்த்து பராமரிக்க ஒப்பந்த தொழிலாளர்கள் அமைக்கப்பட்டு, பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வந்தது. இவைகளை அந்தந்தப் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். 

கடந்த 2 ஆண்டு காலமாக இந்தப் பூங்காக்கள் பராமரிக்கப்படாமல், புதர்கள் மண்டியும், விஷப் பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. தி.மு.க., சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பூங்காக்கள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எடுபுடி அரசான எடப்பாடி அரசு தோல்வியை கண்டுள்ளது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. உள்ளாட்சித்துறை முற்றிலுமாக செயலிழந்து உள்ளது. 

உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.பி. வேலுமணி எந்த நடவடிக்கையோ அக்கறை காட்டுவதில்லை. கோவை மாநகராட்சி முழுவதும் குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக கோவை மாவட்டம் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளது. கோவை மாநகராட்சி தத்தளித்து வருகிறது," என்றார்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...