மனித - விலங்குகள் மோதலை தடுக்கும் சிறப்பு குழுக்கள் நியமனம்

நீலகிரி: மனித விலங்குகள் மோதலை தடுக்கும் வகையில் சிறப்பு குழுக்கள் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.


நீலகிரி: மனித -  விலங்குகள் மோதலை தடுக்கும் வகையில் சிறப்பு குழுக்கள் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. 

இந்நிலையில், யானை, காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி கிராமப் புறங்களிலும், நகர் பகுதிகளிலும் வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் காட்டெருமை, கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விளை நிலங்களை சூறையாடி வருகின்றன. இதனால், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு, மனித உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.

இதனைத் தடுக்கும் முயற்சியில் வனத்துறை சார்பில் 9 பேர் கொண்ட சிறப்பு குழுக்களை இன்று உதகையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் வன விலங்குகள் தொடர்பாக பொதுமக்கள் உடனடியாக 0423-2440968 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தொடர்பு கொண்டால், உடனடியாக அப்பகுதிக்கு சிறப்பு குழுக்கள் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று வனவிலங்குகளை விரட்டும் பணியில் ஈடுபடுவார்கள். தற்போது, நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 3 சிறப்பு குழுக்கள் ஈடுபடவுள்ளனர்.



Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...