போலிசாரை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

கோவை : கோவை அடுத்த குனியமுத்தூர் பகுதியில் நீரா மற்றும் கள் இறக்கிய விவசாயிகளின் தோட்டத்தில் தென்னம்மரத்தின் பாளையை வெட்டிய மதுவிலக்கு போலிசாரை கண்டித்து விவசாயிகள் இராமநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

கோவை : கோவையை அடுத்த குனியமுத்தூர் பகுதியில் நீரா மற்றும் கள் இறக்கிய விவசாயிகளின் தோட்டத்தில் தென்னம்மரத்தின் பாளையை வெட்டிய மதுவிலக்கு போலிசாரை கண்டித்து விவசாயிகள் இராமநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.



குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் அருணாசலம் (57). இவர் அப்பகுதியில் தென்னை விவசாயம் செய்து வருகிறார். இதில், அருணாசலம் நீரா மற்றும் கள் இறக்கி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை திடீரென இவரது தோட்டத்திற்கு வந்த போலிசார் அத்துமீறி தென்னம் பாளையை வெட்டி பானைகளை உடைத்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

அதே போல, செந்தில் ராஜ் என்பவரின் தோட்டத்திலும் விவசாயிகளை விஷக்கள் விற்பதாகக் கூறி வழக்கு பதிவு செய்வதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் ஒன்றிணைந்த விவசாயிகள், அத்துமீறி மதுவிலக்கு காவல்துறையினர் மரத்தின் பாளையை வெட்டியதை கண்டித்து இராமநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இது குறித்து விவசாயி அர்ஜூனன் கூறியதாவது, எங்கள் தோட்டத்தில் நீரா பாணம் மற்றும் கள் இறக்கினோம்.ஆனால் போலிசார் ஊமத்தம் இலையை கள்ளில் கலந்து விஷக்கள் விற்பதாகச் சொல்லி மிரட்டினார். அதே போல குண்டர் சட்டத்தில் கைது செய்வதாக மிரட்டியதாகவும் இதனால் ஒன்றிணைந்து விவசாயிகள் சங்கம் சார்பில் காவல் நிலையத்தை முற்றுகை இட்டுள்ளோம் என்றார்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...