தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கு நெடுந்தூர ஓட்டப்பந்தையம்

நீலகிரி: குன்னூரில் தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நெடுந்தூர ஓட்டப்பந்தையம் எம்.ஆர்.சி.தங்கராஜ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

நீலகிரி: குன்னூரில் தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நெடுந்தூர ஓட்டப்பந்தையம் எம்.ஆர்.சி.தங்கராஜ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

ஆண்டுதோறும் தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நெடுந்தூர ஓட்டப்பந்தையம் குன்னூர் ராணுவ மையத்தின் சார்பில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான 10 கிலோ மீட்டர் நெடுந்தூர ஓட்டப்பந்தையத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தெற்கு கட்டளைக்கு கீழ் வரும் 10 குழுக்களைச் சேர்ந்த 60 ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 10 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த நெடுந்தூர ஓட்டப்பந்தையம், குன்னூர் தங்கராஜ் ஸ்டேடியத்தில் தொடங்கி  சிங்கார தோப்பு வழியாக மீண்டும் ஸ்டேடியத்தை வந்தடைந்தது.

பெங்களூர் ராணுவ மையத்தைச் சேர்ந்த அவில்தார்பி முதலிடத்தைப் பிடித்து வெற்றிபெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு எம்.ஆர்.சி. ராணுவ மைய தலைவர் பிரிகேடியர் எஸ்.கே.சாங்வான்பரி சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.



Newsletter

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...