மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி

கோவை : குழந்தை தொழிலாளர் அகற்றும் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் களப்பணி குறித்து பயிற்சி மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.

கோவை : குழந்தை தொழிலாளர் அகற்றும் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் களப்பணி குறித்து பயிற்சி மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் கல்லார், எஸ்.எம் நகர், ஆலாங்கொம்பு, அறிவொளி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு மையங்கள் மூலம் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு மத்திய அரசின் குழந்தை தொழிலாளர் அகற்றும் திட்டத்தின் மூலம் கல்வி உபகரணங்கள், இலவச தொழில் கல்வி, விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதுடன் மாதம் ரூ. 400 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்த மையங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் அதன் களப்பணிகள் குறித்த பயிற்சி மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேட்டுப்பாளையத்தில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. 

வெள்ளிப்பாளையம் சாலையில் உள்ள ஈடன் கார்டனில் இயற்கை விவசாயம் செய்து வரும் மத்திய அரசின் விருது பெற்ற ராஜரத்தினம் மருத்துவ குணம் வாய்ந்த நோனி, முள்சீதா, மற்றும் கொய்யா, பப்பாளி உள்ளிட்ட இயற்கை விவசாயம் குறித்த களப்பயிற்சியை மாணவர்களுக்கு அளித்தார். 

மேலும், குளோனிங் முறையில் இலையில் இருந்து புதிய நாற்றுகளை உற்பத்தி செய்வது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. அத்துடன் இயற்கை சூழலை காக்க சுற்றுச்சூழலின் அவசியத்தை உணர்த்தவும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...