திருப்பூரில் அ.தி.மு.க. எம்.பி. சத்தியபாமா கார் மோதியதில் தி.மு.க உறுப்பினர் பலி

திருப்பூர்: திருப்பூரில் அதிவேகமாக சென்ற எம்.பி. சத்தியபாமா-வின் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தி.மு.க உறுப்பினர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் அதிவேகமாக சென்ற அ.தி.மு.க. எம்.பி. சத்தியபாமா-வின் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தி.மு.க உறுப்பினர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்னத்தூர் தேவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (25). அப்பகுதியில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராகவும் உள்ளார்.

இந்த நிலையில், நேற்று அவர் அருகிலுள்ள கோவில் திருவிழாவுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு தனது நிறுவனத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கோபி - குன்னத்தூர் சாலை செட்டிகுட்டை பிரிவு என்னுமிடத்தில் எம்.பி. சத்தியபாமா-வை கோவை விமான நிலையத்திலிருந்து அழைத்து வர அவரது காரை ஓட்டுநர் செந்தில்குமார் வேகமாக இயக்கி வந்ததில் கட்டுப்பாட்டை இழந்து அருண்குமார் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த குன்னத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அருண்குமார் உடலை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...