பேராசிரியை விவகாரம்: மதுரை காமராஜர் பல்கலை., துணைவேந்தர், பதிவாளரிடம் விசாரணை

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் செல்லதுரை மற்றும் பதிவாளர் சின்னையாவிடம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானம் விசாரணை நடத்தினார்.


பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் செல்லதுரை மற்றும் பதிவாளர் சின்னையாவிடம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானம் விசாரணை நடத்தினார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள  தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தியதாகச் சர்ச்சையில் சிக்கிய  பேராசிரியை நிர்மலா தேவியின் வாட்ஸ்ஆப் ஆடியோ விவகாரம் தொடர்பாக, விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானத்தை நியமித்து ஆளுநர்  உத்தரவிட்டார். விசாரணை நடத்துவதற்காக மதுரை அரசு விருந்தினர் மாளிகை வந்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக பல்கலை பதிவாளர் சின்னையாவிடம் விசாரணை நடத்தினார். இதன் பின்னர் துணைவேந்தர் செல்லதுரையிடம் விசாரணை நடத்தினார்.

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி விருதுநகரில் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், பேராசிரியை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 7 குழுக்கள் அமைக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர். எஸ்.பி., ராஜேஷ்வரி மற்றும் டி.எஸ்.பி., முத்து சங்கரலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...