ஊடக பெண்கள் குறித்து சர்ச்சை பதிவு : எஸ்.வி. சேகரை கைது செய்யக் கோரி புகார்

கோவை : ஊடக பெண்கள் குறித்து வக்கிரகமான முறையில் சமூக வலைதளத்தில் பதிவுசெய்த பா.ஜ.க., ஆதரவாளர் எஸ்.வி. சேகரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.


கோவை : ஊடக பெண்கள் குறித்து வக்கிரகமான முறையில் சமூக வலைதளத்தில் பதிவுசெய்த பா.ஜ.க., ஆதரவாளர் எஸ்.வி. சேகரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.



அருப்புக் கோட்டை தனியார் கல்லூரியின் உதவி பேராசிரியர் நிர்மலா தேவி, தன்னிடம் பயிலும் மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான தொலைப்பேசி உரையாடல் வெளியானதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஆளுநருக்கும் தொடர்பிருக்கலாம் என பல்வேறு அரசியல் தலைவர்கள் சந்தேகம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, முதல்முறையாக ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, ஒரு பெண் நிரூபர் ஒருவரின் கண்ணத்தை தொட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக ஆளுநருக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அந்த பெண் நிரூபரும் டுவிட்டரில் ஆளுநருக்கு எதிராக கருத்து பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், பா.ஜ.க.வின் ஆதரவாளரும், நடிகருமான எஸ்.வி. சேகர், பெண் நிரூபரை வறுத்தெடுத்திருந்தார். மேலும், பெண் நிரூபர்களும் ஊடகத்துறையில் பாலியல் வன்கொடுமை சந்திப்பதாகவும் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. 



இந்த நிலையில், ஊடக பெண்கள் குறித்து வக்கிரகமான முறையில் சமூக வலைதளத்தில் பதிவுசெய்த பா.ஜ.க., ஆதரவாளர் எஸ்.வி. சேகரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த மனுவில், பெண் பத்திரிகையாளரை அவதூறாக அவர்களின் கண்ணியத்தை களங்கபடுத்தும் விதமாக சமூகவலைத்தளங்களில் ஒட்டு மொத்த பெண்களையும் இழிவுப்படுத்தியுள்ளார். இது ஒட்டுமொத்த மக்களையும், பெண்களையும் கலங்கப்படுத்தும் விதமாக உள்ளது. ஆகவே, எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாதர் சங்கத்தினர் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். எஸ்.வி. சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

இது குறித்து மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதிகா கூறியதாவது :- ஊடக பெண்களை தரக்குறைவாக சமூகவலைதளத்தில் பதிவிட்ட எஸ்.வி சேகரை, உடனடியாக கைது செய்ய வேண்டும். தொடர்ந்து, பெண்களுக்கு எதிராக பா.ஜ.க.,வினர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் நிலையில், எஸ்.வி. சேகர் மிக தாழ்ந்த முறையில் பெண் பத்திரிகையாளர்களை விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது. ஆகவே, இவர் மீது கோவை மாநகர காவல் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Newsletter

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...