உடலில் உறுப்புகளைப் போல வளரும் கட்டிகள்... விநோத நோயால் பாதிக்கப்பட்டவருக்கு உதவ முன்வருமா தனியார் மருத்துவமனைகள்..?

தருமபுரியில் உறுப்புகளைப் போல ஒரு அங்கமாக வளர்ந்த கட்டிகளை அகற்றுவதற்கு, இலவச சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் முன்வருமா..? என விநோத நோயால் அவதிப்பட்டு வருபவர் எதிர்பார்த்துள்ளார்.

தருமபுரியில் உறுப்புகளைப் போல ஒரு அங்கமாக வளர்ந்த கட்டிகளை அகற்றுவதற்கு, இலவச சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் முன்வருமா..? என விநோத நோயால் அவதிப்பட்டு வருபவர் எதிர்பார்த்துள்ளார். 



தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமமான போடாரங்காட்டைச் சேர்ந்தவர் பழனிசாமி (46). இவர், 12 வயதில் இருந்து தாடை, கழுத்தின் பின் பகுதி, கைகளின் மணிக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் எட்டு கட்டிகள் உருவாகின. பழனிசாமி வளர வளர, உறுப்புகளைப் போல கட்டிகளும் வளரத் தொடங்கின. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். மருந்து, மாத்திரைகளை மருத்துவர் கொடுத்தனர்.

சுமார் 18 கிலோ எடை வரை வளர்ந்த அந்தக் கட்டிகளால், பழனிசாமிக்கு பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டது. உடலில் கட்டிகளுடன் பயணிக்க முடியாததால், மருத்துவ சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார். எந்தப் பணிக்கும் செல்லாத நிலையில், வாழ்வாதாரத்திற்காக உதவித்தொகை கேட்டு, பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் பலனில்லை. மேலும், இந்த விநோத நோயின் காரணமாக பழனிசாமிக்கு திருமணமும் ஆகவில்லை. சகோதரர்கள் தயவில் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், தனது பாதிப்புகள் குறித்த பழனிசாமி கூறுகையில், ''மாவட்ட நிர்வாகம், உதவித்தொகை வழங்கா விட்டாலும் பரவாயில்லை. உடலில் உள்ள கட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்தால், என் சொந்தக் காலிலேயே நின்று பிழைத்துக் கொள்வேன்,'' என்றார்.

மன தைரியத்துடன் வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு செல்ல துடிக்கும் பழனிசாமிக்கு அரசு தரப்பில் இருந்து எந்தவித உதவியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், குணப்படுத்தவே முடியாத நோய்களுக்கு பல்வேறு தனியார் மருத்துவமனைகள் இலவசமாக சிகிச்சை அளிக்க முன்வரும் நிலையில், பழனிசாமிக்கும் அதுபோன்று நிகழ்வு நிகழாத என அவரும், அவரது குடும்பத்தினரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...