திருப்பூரில் உலக நன்மை வேண்டி வேம்பு - அரச மரங்களுக்கு திருக்கல்யாணம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் பிரசித்திபெற்ற மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், உலக நன்மை வேண்டி வேம்பு - அரச மரங்களுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் பிரசித்திபெற்ற மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், உலக நன்மை வேண்டி வேம்பு - அரச மரங்களுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. 



பல்லடம் அருகே மாதப்பூரில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில், உலக நலன் வேண்டியும், மும்மாரி மழை பெய்ய வேண்டியும் வேம்பு - அரச மரங்களுக்கு திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. திருமணத்தை கோவில் பூசாரி சரவணமுத்து வெகுவிமரிசையாக நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சிறப்பு அபிசேகம், ஆராதனை மற்றும் பூஜைகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாதப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 



இது குறித்து பக்தர்கள் கூறுகையில், "மூத்தோர்களது வாக்குப்படி காலங்காலமாக அரச- வேப்ப மரங்களுக்கு திருமணம் செய்து வைத்தால், குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி, கல்வியில் தேர்ச்சி உள்ளிட்ட பல நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம். அதனைப் பின்பற்றி இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட்டது," எனக் கூறினர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...