கார்களில் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்த முடிவு : சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தகவல்

டெல்லி : அடுத்த ஆண்டில் இருந்து விற்பனைக்கு வரும் கார்களில், உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்த முடிவு செய்திருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லி : அடுத்த ஆண்டில் இருந்து விற்பனைக்கு வரும் கார்களில், உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்த முடிவு செய்திருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கார்களில் பொருத்தப்பட்டு இருக்கும் பதிவு எண் பலகைகளை, உயர் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகள், 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், அந்த பணிகள் முடிவடைந்து, அடுத்தாண்டு, ஜனவரியிலிருந்து விற்பனைக்கு வரும் கார்களில், உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்தப்பட உள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது.

இதுவரை, கார் பதிவு எண் பலகைகளை, அந்தந்த மாநில அரசுகளே வாங்கி, வாகனப் பதிவின்போது பொருத்தி வந்தன. இனி, இந்த உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் கார் தயாரிப்பு நிறுவனங்களாலேயே பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படும். இந்த புதிய பதிவு எண் பலகையின் விலை, கார் விலையுடன் சேர்க்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

காரின் இன்ஜின் எண், 'சேசிஸ்' எண் போன்ற விபரங்களும் அதில் இருக்கும். கார் திருட்டு போன்ற சம்பவங்களின் போது, இவை பெரும் உதவியாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின், இந்த பதிவு எண் பலகை மாற்றம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. 

இது தொடர்பாக வரும் மே 10-ம் தேதி வரை மக்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Newsletter

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...