காவிரி விவகாரம்: மத்திய அரசு அலுவலகங்களுக்குப் பூட்டு போடும் போராட்டம் அறிவிப்பு

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து மத்திய அரசு அலுவலகங்களுக்கு விரைவில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என திருப்பூரில் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது.

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து மத்திய அரசு அலுவலகங்களுக்கு விரைவில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என திருப்பூரில் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது. 

திருப்பூர் குமரன் சிலை முன்பு தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், நியுட்ரினோ திட்டத்தை கைவிடக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொது செயலாளர் சங்கிலி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் பேசுகையில், "நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட விட்டால் இளைஞர்கள் ஒன்று திரண்டு வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு அந்தத் திட்டத்தை தகர்ப்போம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால், மத்திய அரசு அலுவலகங்களுக்கு விரைவில் பூட்டு போட்டு போராட்டம் நடத்த உள்ளோம்." எனக் கூறினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட பொது செயலாளர் பாண்டியராஜன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வம், திருப்பூர் மாவட்ட பொது செயலாளர் முத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...