பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டம் : கோவையைச் சேர்ந்த முன்னாள் கைதியின் செல்போன் உரையாடலால் பரபரப்பு

கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த முன்னாள் கைதி ரபீக் என்பவர், பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாகப் பேசியிருக்கும் செல்போன் உரையாடல் வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த முன்னாள் கைதி ரபீக் என்பவர், பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாகப் பேசியிருக்கும் செல்போன் உரையாடல் வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வெளியே வந்தவர் ரபீக். 52 வயதான இவர், பழைய கார்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த கார் வியாபாரியான பிரகாஷ் ஒருவரிடம் தொழில் நிமித்தமாக ரபீக் பேசும் ஆடியோ ஓன்று வெளியாகி உள்ளது. அதில், பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாக அவர் கூறுவது போல பதிவாகியுள்ளார். இந்த ஆடியோ தற்போது வாட்ஸ் அப் மூலம் வேகமாகப் பரவி வருகின்றது.

மேலும், அந்த ஆடியோவில் கூறியிருப்பதாவது :- கொம்பு முளைத்தவன் வந்தாலும், என்னை ஒன்றும் பண்ண முடியாது. நாங்கள் "பிரதமர் மோடியையே கொலை செய்ய வேண்டும்" என்று முடிவு செய்துள்ளோம். நான் அத்வானிக்கு குண்டு வைத்தவன். 160 வண்டி உடைத்த வழக்குகள் உள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டம், தடா போன்ற எல்லா வழக்குகளையும் பார்த்துள்ளோம், எனக் கூறியுள்ளார்.

இந்த வாட்ஸ் அப் ஆடியோ குறித்து கோவை மாநகர போலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக விசாரிக்க கோவை மாநகர போலிசார் ரபீக்கை தேடிய போது, அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா நேரடியாக இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், பிரதமர் குறித்து பேசியது தொடர்பாக கோவையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் ரபீக்கிடம் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, ரபீக்கிற்கு சம்மன் அனுப்பவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...