பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டம் : கோவையைச் சேர்ந்த முன்னாள் கைதியின் செல்போன் உரையாடலால் பரபரப்பு

கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த முன்னாள் கைதி ரபீக் என்பவர், பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாகப் பேசியிருக்கும் செல்போன் உரையாடல் வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த முன்னாள் கைதி ரபீக் என்பவர், பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாகப் பேசியிருக்கும் செல்போன் உரையாடல் வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வெளியே வந்தவர் ரபீக். 52 வயதான இவர், பழைய கார்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த கார் வியாபாரியான பிரகாஷ் ஒருவரிடம் தொழில் நிமித்தமாக ரபீக் பேசும் ஆடியோ ஓன்று வெளியாகி உள்ளது. அதில், பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாக அவர் கூறுவது போல பதிவாகியுள்ளார். இந்த ஆடியோ தற்போது வாட்ஸ் அப் மூலம் வேகமாகப் பரவி வருகின்றது.

மேலும், அந்த ஆடியோவில் கூறியிருப்பதாவது :- கொம்பு முளைத்தவன் வந்தாலும், என்னை ஒன்றும் பண்ண முடியாது. நாங்கள் "பிரதமர் மோடியையே கொலை செய்ய வேண்டும்" என்று முடிவு செய்துள்ளோம். நான் அத்வானிக்கு குண்டு வைத்தவன். 160 வண்டி உடைத்த வழக்குகள் உள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டம், தடா போன்ற எல்லா வழக்குகளையும் பார்த்துள்ளோம், எனக் கூறியுள்ளார்.

இந்த வாட்ஸ் அப் ஆடியோ குறித்து கோவை மாநகர போலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக விசாரிக்க கோவை மாநகர போலிசார் ரபீக்கை தேடிய போது, அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா நேரடியாக இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், பிரதமர் குறித்து பேசியது தொடர்பாக கோவையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் ரபீக்கிடம் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, ரபீக்கிற்கு சம்மன் அனுப்பவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...