வழித்தடம் இல்லாததால் பெண் தர மறுப்பு: மாப்பிள்ளை கோலத்தில் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருப்பூர்: திருப்பூரில் வீட்டிற்கு வழித்தடம் இல்லாததால் யாரும் பெண் தர முன்வராததால், வழித்தடம் ஏற்படுத்தி தரக்கோரி திருமணக் கோலத்தில் சென்று மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் மனு அளித்தார்.

திருப்பூர்: திருப்பூரில் வீட்டிற்கு வழித்தடம் இல்லாததால் யாரும் பெண் தர முன்வராததால், வழித்தடம் ஏற்படுத்தி தரக்கோரி திருமணக் கோலத்தில் சென்று மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் மனு அளித்தார்.

ஊத்துக்குளி அடுத்த சேனாபதி செட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருணாசலம். இவருக்கு சொந்தமான வீட்டிற்கு அரசால் வழங்கப்பட்ட பட்டா உள்ள நிலையில், அவரது வீட்டிற்கு வழித்தடமானது குறிப்பிடப்படவில்லை. இதனால், இவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தால் அவர்கள் வீட்டிற்கு வழி இல்லாதவருக்கு எப்படி பெண் தருவது என பெண் தர மறுப்பதாக அவரது குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர். எனவே, தங்கள் வீட்டிற்கு சென்று வர முறையான பாதையை அமைக்க உத்தரவிடக் கோரி அருணாசலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில், வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ள அவரது இடத்திற்கு முறையான பாதையை ஓதுக்கீடு செய்து தர வேண்டும் என 2 ஆண்டுகளுக்கு முன்னர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும், இதுவரையிலும் அதிகாரிகள் தங்களுக்கு வழித்தடம் ஏற்படுத்தி தர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இருப்பினும், அவரது கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், தனக்கு திருமணம் நடக்க வழித்தடம் பிரச்சனையாக இருப்பதை உணர்த்தும் விதமாகவும், பாதிக்கப்பட்ட அருணாசலம் மணமகன் கோலத்தில் கழுத்தில் மாலையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார்.



இதனைக் கண்ட போலீசார் மணமகன் கோலத்தில் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி மறுத்தனர். பின்னர், நீண்ட நேரத்திற்குப் பிறகு மாலையைக் கழற்றிய பிறகே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதித்தனர். திருமணம் நடக்க அரசு அலுவலர்களே தடையாக இருப்பதாகக் கூறி இளைஞர் ஒருவர் மணமகன் கோலத்தில் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...