தனிநபர் கழிப்பறையை அகற்றுமாறு வனத்துறையினர் மிரட்டுவதாக ஆதிவாசி மக்கள் புகார் மனு

நீலகிரி: நீலகிரியில் தனிநபர் கழிப்பறைகளை அகற்றுமாறு வனத்துறையினர் தொடர்ந்து மிரட்டி வருவதாக பெட்ட குறும்பர் ஆதிவாசி இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: நீலகிரியில் தனிநபர் கழிப்பறைகளை அகற்றுமாறு வனத்துறையினர் தொடர்ந்து மிரட்டி வருவதாக பெட்ட குறும்பர் ஆதிவாசி இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



தெப்பக்காடு பகுதியில் உள்ள கிராமங்களில் பல்வேறு ஆதிவாசி இன மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இதில், யானை கேம்ப்பாடி என்னும் கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு அரசு அறிவித்த சலுகைகள் இதுவரை கிடைத்து வந்தது. வனவிலங்குகள் அதிகமாக அச்சுறுத்தல் உள்ள இந்தக் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கு ரூ. 12,000-ம், பணி முடியாத நிலையில் இருக்கும் கழிப்பிடம் கட்ட, மேலும் ரூ. 5,000-ம் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் பெற்று இங்குள்ள ஆதிவாசி மக்கள் இப்பணிகளை முடித்தனர்.

இந்நிலையில், வனத்துறை இங்கு கட்டிய கழிப்பிடங்களை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ஆதிவாசி இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது ;- வனவிலங்கு அச்சுறுத்தல் உள்ள எங்கள் கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் வனப்பகுதியில் செல்லாமல் இருக்க தனிநபர் கழிப்பிடம் கட்டியும், அதைப் பயன்படுத்த முடியவில்லை. வனத்துறையினர் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. எனவே, கிராமத்தில் உள்ள கழிப்பிடங்களை வனத்துறையினர் அகற்றக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும், இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...