கோவையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், பட்டாணி பறிமுதல்

கோவை: கோவையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் சாயம் ஏற்றப்பட்ட பச்சைப் பட்டாணி ஆகியவற்றை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் சாயம் ஏற்றப்பட்ட பச்சைப் பட்டாணி ஆகியவற்றை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவ்வப்போது மாநகரில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.



அதன்படி, கடந்த வாரம் தாமஸ் வீதியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலன தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவின் பேரில், மாநகரில் உள்ள வணிக வளாகங்கள், பழக்கடைகள், குளிர்பானக் கடைகள் மற்றும் குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் சாயம் ஏற்றப்பட்ட பட்டாணி ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, சுமார் 25 கிலோ பச்சைப் பட்டாணி, 70 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை அழித்தனர்.



உணவு பாதுகாப்புத் துறை சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சி நடத்தப்பட்டதும், அதில் கலப்பட உணவுகளை கண்டறிதல் குறித்த செய்முறை விளக்கமளித்ததும் குறிப்பிடத்தக்கது.



Newsletter

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...