கர்நாடக தேர்தலுக்கு பிறகு காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் : அய்யாக்கண்ணு நம்பிக்கை

கோவை : கர்நாடகா தேர்தல் முடிந்ததும் காவிரி மேலாண்மை வாரியத்தை பிரதமர் மோடி அமைப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.


கோவை : கர்நாடகா தேர்தல் முடிந்ததும் காவிரி மேலாண்மை வாரியத்தை பிரதமர் மோடி அமைப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- 

விவசாயிகளுக்கு இலாபகரமான விலை, தண்ணீர் கொடுக்காமல் மத்திய, மாநில அரசுகள் வஞ்சித்து வருகின்றன. மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்ய வேண்டும். ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது. இதன்மூலம் தமிழகத்தை பாலைவனமாக உருவாக்கி ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பிரதமர் மோடி செயல்படுகிறார். மேலும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டிய கடமை பிரதமர் மோடிக்கு உள்ளது. 



கர்நாடகா தேர்தல் முடிந்ததும், பிரதமர் மோடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து, பிரதமர் மோடி விவசாயிகளுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையும் தனக்கு உள்ளது, என்றார். 

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...