நிர்மலா தேவி விவகாரம் : மேலும் ஒரு பெண் உதவி பேராசிரியைக்கு சம்மன்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், அவருடன் தங்கியிருந்த மேலும் ஒரு பெண் உதவி பேராசிரியைக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், அவருடன் தங்கியிருந்த மேலும் ஒரு பெண் உதவி பேராசிரியைக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது. 

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை தனியார் கல்லூரியின் பேராசிரியர் நிர்மலா தேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவிகளிடம் பேசத் தூண்டிய பேராசிரியர் முருகன் என்பவரையும் போலீசார் அண்மையில் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை வளையம் விரிவடைந்து வருகிறது. 

இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியை நிர்மலா தேவியுடன் தங்கியிருந்த தூத்துக்குடி தனியார் கல்லூரியை சேர்ந்த உதவி பேராசிரியை ஜெனிதா தமிழ்மலர் என்பவருக்கு சி.பி.சி.ஐ.டி.,போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் விருந்தினர் இல்லத்தில் நிர்மலா தேவி 9 நாட்கள் தங்கியிருந்தார். அவருடன் ஜெனிதா தங்கியிருந்த ஆதாரம் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவருக்கு சம்மன் அனுப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...