சச்சின் பிறந்தநாளில் ரசிகர்களை கொதிக்க வைத்த ஆஸி., கிரிக்கெட் வாரியம்

சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடி வரும் நிலையில், அவர்களை கடுப்பேற்றும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு ட்வீட் செய்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடி வரும் நிலையில், அவர்களை கடுப்பேற்றும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு ட்வீட் செய்துள்ளது. 

கிரிக்கெட் உலகின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 46-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். சச்சினின் ஸ்பெஷல் ஷாட், பெஸ்ட் கேட்ச், புகைப்படம் என தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேமியன் பிளம்மிங்கும் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் டேமியன் பிளம்மிங்-க்கு தெரிவித்துள்ள வாழ்த்துப்பதிவு டெண்டுல்கர் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

டேமியன் பிளம்மிங் பந்துவீச்சில் டெண்டுல்கர் போல்ட் ஆகும் பழைய கிரிக்கெட் மேட்ச் ஒன்றின் வீடியோவை பதிவிட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் டேமியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. ஆஸி., கிரிக்கெட் வாரியத்தின் இந்த விஷம பதிவுக்கு இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பதிவிட்ட வீடியோவுக்கு கீழே ஆஸ்திரேலிய அணியை சச்சின் துவம்சம் செய்த பல இன்னிங்ஸ்களின் வீடியோவை பதிவிட்டு இந்திய ரசிகர்கள் தங்களது பதிலை அளித்துள்ளனர். 

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...