ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை மூடல்: ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

நீலகிரி: நீலகிரியில் மத்திய அரசின் கீழ் இயங்கி வந்த ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை அதிகாரப்பூர்வமாக மூடப்படுவதாக அறிவித்ததையடுத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி: நீலகிரியில் மத்திய அரசின் கீழ் இயங்கி வந்த ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை அதிகாரப்பூர்வமாக மூடப்படுவதாக அறிவித்ததையடுத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதகையில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை கடந்த 1981-ம் ஆண்டு அப்போதைய பாரத பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் திறக்கப்பட்டது. பல ஆண்டுகள் இயங்கி வந்த இந்த தொழிற்சாலை, வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தால் நாளடைவில் நலிந்து வரத்தொடங்கியது.

இங்கு இருந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் விருப்ப ஓய்வு அளித்து அனுப்பி வைக்கப்பட்டனர். பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் விருப்ப ஓய்வு வாங்க மறுத்தும், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க கோரியும் சுமார் 165 தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு சென்று வந்தனர். இவர்களுக்கு தொழிற்சாலை நிர்வாகம் பல முறை பணியை விட்டுச் செல்லுமாறு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அவர்கள், தங்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையினை வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.



இந்நிலையில், நேற்று இந்த தொழிற்சாலை உச்ச நீதிமன்றம் உத்தரவின் படி நிரந்தரமாக மூடப்படும் என்று அறிவித்தது. அதன்படி, நேற்று மாலை தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிப்பு பிரசுரம் தொழிற்சாலை வாயிலில் ஒட்டப்பட்டது. இதனையடுத்து 164 பணியாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும், தொழிற்சாலை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் நாளை முதல் பழைய மாதிரியே பன்ச் அடித்துச் செல்லலாம் என்று கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.



நீலகிரி மாவட்டத்தில் எந்த வித மத்திய, மாநில அரசுகளின் தொழில் நிறுவனங்களும் இல்லாத நிலையில், பல ஆண்டுகள் நீலகிரி மாவட்ட மக்களுக்கு தொழில் வழங்கி வந்த இந்த தொழிற்சாலையும், மூடப்பட்டது நீலகிரி வாழ் மக்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல ஏக்கர் பரப்பளவில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இருந்தும், எந்த பயனும் இல்லாமல் இந்த கட்டிடங்கள் பாழடைந்து போவதுக்குள், நீலகிரி மக்களின் நெடுநாள் கோரிக்கையான மருத்துவக்கல்லூரி அல்லது ஏதேனும் தொழில் நிறுவனமோ இந்த இடத்தில் வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் ஏதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...