திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வாரச்சந்தை வியாபாரிகள்

திருப்பூர் : வாரச் சந்தை வியாபாரிகளிடம் அதிக சுங்கத் தொகை வசூலிப்பதாகவும், அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதாகக் கூறி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர் : வாரச் சந்தை வியாபாரிகளிடம் அதிக சுங்கத் தொகை வசூலிப்பதாகவும், அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதாகக் கூறி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர். 

அனுப்பர்பாளையத்தில் வாரம் ஒருமுறை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சந்தையில், 500-க்கும் மேற்பட்டவர்கள் கடைகளை அமைத்து வருகின்றனர். அவ்வாறு, கடை அமைப்பவர்கள் சுங்கத் தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டுவது வழக்கம். ஆனால், கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அவ்வாறு வசூலிக்காமல், கடைக்கு ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை வசூலித்து வருவதோடு, பணம் செலுத்த முடியாதவர்களிடம் அடியாட்களைக் கொண்டு மிரட்டி வருவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். 

எனவே, இப்பிரச்சனைகள் குறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அசோகனை பாதிக்கப்பட்ட வியாபாரிகள் முற்றுகையிட்டு மனு அளித்தனர். இதையடுத்து, சுங்கம் வசூலிப்பதை முறைப்படுத்துவதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...