கோவையில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை : மேற்கூரைகள் பறந்ததால் அலறிய ஊழியர்கள்

கோவை : கோவையில் கனமழையுடன் பலத்த காற்று வீசியதால் பெரும்பாலான நிறுவனங்களின் மேற்கூரைகள் பறந்ததால் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.


கோவை : கோவையில் கனமழையுடன் பலத்த காற்று வீசியதால் பெரும்பாலான நிறுவனங்களின் மேற்கூரைகள் பறந்ததால் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். 

கோவையில் இன்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த மேற்கூரைகள் பறந்தன. பலத்த சத்தத்துடன் அவை கீழே விழுந்ததை கண்டு ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் அலறி அடித்து கட்டிட வளாகத்தின் உள்ளே ஓடினர்.தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக புழுதி பறந்து அலுவலகத்தினுள் வந்ததால், பழைய கட்டிடத்தில் பணி புரிந்த ஊழியர்கள் கதவை அடைத்து விட்டனர். இந்த சூறாவளி காற்றின் காரணமாக மின் தடையும் ஏற்பட்டதால் சிரமத்திற்கு ஆளாகினர். சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நிறுத்தி விட்டு காற்றின் வேகம் தணிந்த பின்னர் கிளம்பி சென்றனர்.​

இதனைத் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது. வெயிலின் உக்கிரத்தால் கடந்த சில தினங்களாக பொதுமக்கள் அவதியடைந்து வந்த நிலையில், தற்போது பெய்த மழையின் காரணமாக சில்லென்ற காற்று வீசுகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இடையர்பாளையம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. துடியலூர், கவுண்டம்பாளையம், பீளமேடு, காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாலைகளில் சாய்ந்ததால் சிலர் படுகாயம் அடைந்தனர். 

மழை நின்ற பிறகு கோவையின் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஈடுபட்டுள்ளது. 

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...