கள் இறக்கக் கட்டப்படும் பானைகளை உடைக்கும் போலீசாரை கண்டித்து மனு

கோவை: திருப்பூரில் கள் இறக்குவதற்காகக் கட்டப்படும் பானைகளை போலீசார் உடைப்பதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மேற்கு மண்டல காவல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

கோவை: திருப்பூரில் கள் இறக்குவதற்காகக் கட்டப்படும் பானைகளை போலீசார் உடைப்பதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மேற்கு மண்டல காவல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

பல்லடம், மங்கலம், ராமநாயக்கன்பாளையம், குண்டடம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட கிராமங்களில் தென்னை மரங்களில் கள் இறக்குவதற்காகக் கட்டப்பட்டிருந்த பானைகளை காவல்துறையினர் உடைத்ததுடன், விவசாய தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கள் இறக்க அனுமதியுள்ள நிலையில், தமிழகத்தில் கள் இறக்குவதற்கு தடை அமலில் உள்ளது. இது தொடர்பாக வழக்குகளும், கள் இறக்க அனுமதி வழங்கவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளும் பரிசீலனையில் இருந்து வருகின்றது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையினரின் இத்தகைய செயல் விவசாயிகளைப் பாதிப்பதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள மேற்கு மண்டல ஐ.ஜி பாரியிடம் விவசாயிகள் மனு அளித்தனர். தொடர்ந்து, கள் இறக்க தமிழக அரசு மறுக்கும் பட்சத்தில் மாநில அளவில் கூட்டம் நடத்தி போராட்டம் நடத்தவும், வரும் 10-ம் தேதி கனியூர் சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

விவசாயிகள் 300-க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வருவதாக வந்த தகவலையடுத்து, மேற்கு மண்டல ஐ.ஜி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...