சூறைக் காற்றால் சரிந்த மரம் : தகவல் கிடைத்த 90 நிமிடங்களில் அப்புறப்படுத்திய குழு

கோவை : கோவையில் வீசிய சூறாவளி காற்றால் சாய்ந்த மரத்தினை 90 நிமிடங்களில் அகற்றிய மாநகராட்சி ஊழியர்களின் துரித நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கோவை : கோவையில் வீசிய சூறாவளி காற்றால் சாய்ந்த மரத்தினை 90 நிமிடங்களில் அகற்றிய மாநகராட்சி ஊழியர்களின் துரித நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.



கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை 06 மணியளவில் கனமழை பெய்தது. அப்போது, புயல் போல வீசிய சூறைக் காற்றினால், கட்டிடங்களின் மேற்கூறைகள் பறந்து சென்றன. மேலும், சாலைகளில் கிடக்கும் மணல் துகள்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

இதனிடையே, வெங்கடசாமி சாலை, புது சித்தாபுதூர் பகுதியில் இருந்த பெரிய வேப்பம் மரம் ஒன்று இந்தக் காற்றுக்கு சரிந்து விழுந்தது. இதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் பெரும் சேதமடைந்தன. மேலும், மின்சார வயர்களின் மீது விழுந்ததால், தீப்பொறி கிளம்பியதுடன், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.



இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மீட்பு குழு, மின்சார ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், சுமார், 90 நிமிடங்களில் உள்ளூர் மக்களின் உதவியுடன் சாலையில் கிடந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும், மின்சாரமும் சீர்செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்தை மாவட்ட தீயணைப்பு அதிகாரி நேரில் பார்வையிட்டார்.

தகவல் அறிந்த சில மணி நேரங்களிலேயே, எந்தவித உயிர்சேதமும் இல்லாமல் பணிகளை துரிதமாக செய்து முடித்த குழுவினருக்கு பொதுமக்கள் பாரட்டுக்களை கூறி வருகின்றனர். இதனிடையே, திறம்பட செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் மலைசாமி, ரவிச்சந்திரன், பாபு, ஜீவா மற்றும் பாலமுருகன், மாநகாரட்சி ஜே.சி.பி. ஓட்டுநர் இளவரசன் ஆகியோரை கவுரவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...