கோவையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானம் : விருந்தினர்களை ஆச்சரியப்படுத்திய திருமண வீட்டார்

கோவை: கோவை மாவட்டம் ஈச்சனாரியில் தொழிலதிபரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட உடல், உறுப்பு தானம் விழிப்புணர்வு நிகழ்வுகள் விழாவிற்கு வந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது.

கோவை: கோவை மாவட்டம் ஈச்சனாரியில் தொழிலதிபரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட உடல், உறுப்பு தானம் விழிப்புணர்வு நிகழ்வுகள் விழாவிற்கு வந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது. 

ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் தொழிலதிபரான இமயவன் - அஞ்சுகம் என்பவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் உடல், உறுப்பு தானம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரங்கு அமைக்கத் திருமண வீட்டாரின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் உடல், உறுப்பு தானம் குறித்து கேட்டறிந்ததுடன், உடல், உறுப்பு தானம் செய்யவும் பதிவு செய்து கொண்டனர். 

திருமண விழாக்களில் உறவுகளையும், நண்பர்களையும் பார்த்து மகிழ்ச்சியடைவதோடு மட்டுமில்லாமல், உடல், உறுப்பு தானம் போன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக திருமண விழாவிற்கு வந்திருந்தவர்கள் தெரிவித்தனர். மேலும், இதுபோன்று அனைத்து விஷேச நிகழ்வுகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினால், உடல், உறுப்புகளுக்காகக் காத்திருப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். தங்கள் இல்லங்களில் நடக்கும் விழாக்களிலும் இதுபோல உடல் உறுப்பு தான நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்து இருக்கிறோம் என அவர்கள் கூறினர்.

வழக்கமாக திருமணம் போன்ற விழாக்களில் இறப்பு பற்றி பேசுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால், இந்த திருமண வரவேற்பு விழாவில் உடல், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதாகத் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். திருமண விழாவிற்கு வந்தவர்கள் ஆர்வத்துடன் வந்து விசாரித்து சென்றனர். இதுவரை 40 பேர் உடல், உறுப்பு தானம் செய்யப்பதிவு செய்திருப்பதாக அந்தத் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறினர்.



"உடல், உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திருமணப் பத்திரிகை கொடுக்கும்போதே இதுபோன்ற உடல், உறுப்பு தானம் நிகழ்ச்சி நடைபெறுவது பற்றி தெரிவித்திருந்தோம்," எனக் கூறுகின்றனர் புதுமணத் தம்பதிகள். 

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...