முறைகேடான ஆதாயத்திற்காகவே கள் இறக்குமதிக்கு தடை : நல்லசாமி குற்றச்சாட்டு

கோவை : முறைகேடான ஆதாயம் பெறுவதற்காக கொடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாகவே, தமிழகத்தில் கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை : முறைகேடான ஆதாயம் பெறுவதற்காக கொடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாகவே, தமிழகத்தில் கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "சீமை சாராய அதிபர்களின் நெருக்கடி காரணமாகவும், முறைகேடான ஆதாயம் பெறுவதற்கு கொடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாகவே கள் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது. கள் உணவு, மது, போதை பொருள் எனப் புரிதல் இல்லாமல் 30 ஆண்டுகளுக்கு முன்பு உணவின் ஒரு பகுதியாக இருக்கக் கூடிய பொருளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கள் இறக்குவதும், குடிப்பதும் மக்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை என அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது. இது உலகளாவிய நடைமுறையும் ஆகும். 

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான பீகார், கர்நாடகா, கேரள மாநிலங்களில் கள் இறக்க அனுமதி உள்ளபோது, தமிழகத்தில் கள் இறக்க அனுமதி மறுப்பது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். வரும் காலங்களில் மென் பானங்கள் மூலமே அதிக வருவாய் ஈட்ட முடியும் என்ற நிலை மாறி வருகிறது. தமிழகத்தில் ஒன்பது நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் மதுபான வகைகளை கண்காணித்து கட்டுப்படுத்தி விற்பனை செய்யும் போதும், கள் கலப்படத்தை கட்டுப்படுத்த அண்டை மாநிலங்களால் முடியும் போதும், தமிழகத்தில் நடைமுறைப்படுத்த முடியாது எனக் கூறுவது அரசின் கையில் ஆகாத தனம். 

மேலும், கள் இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 75,000 மரம் ஏறும் தொழிலாளர்கள், தற்போது அண்டை மாநிலமான கேரளாவிற்கு சென்றுவிட்டனர். பதனியில் இருந்து தயாரிக்கப்படும் சர்க்கரையின் விலை ரூ. 200 ஆக உள்ளது. நீரா பானம் மூலம் சர்க்கரை உற்பத்தி செய்யும் போது ரூ. 500 வரை பெற முடியும் என்பதால் விவசாயிகள் பலன் பெறுவர். தமிழகம் முழுவதும் தற்போது விவசாயிகள் கள் இறக்கி வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யும் போலீசார், பானைகளை உடைப்பது, பொய் வழக்கு போடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுவரை 30,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை சட்ட ரீதியாக சந்திப்போம்," எனக் கூறினார். 

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...