பள்ளித் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

கோவை : பள்ளி தேர்வு முடிவுகள் வெளியாவதில் எந்த காலதாமதமும் ஏற்படாது எனவும், குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


கோவை : பள்ளி தேர்வு முடிவுகள் வெளியாவதில் எந்த காலதாமதமும் ஏற்படாது எனவும், குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை கொடிசியா வளாகத்தில் பொறியல் படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் துவங்க இருக்கும் ஆன்-லைன் கவுன்சிலிங் குறித்த அறிமுக விளக்க நிகழ்ச்சி தனியார் கல்லூரி சார்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயாகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :- இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக அரசு கல்வித்துறைக்கு அதிகளவு நிதி வழங்கி இருக்கிறது. அதன்மூலம் நிறைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. மேலும், மே மாதத்தின் இறுதி வாரத்தில் 1,6,9 மற்றும் 11 வகுப்புகளுக்கு பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்படும். சி.பி.எஸ்.சி., பாடத்தை விட சிறப்பாக கல்வி திட்டம் கொண்டு வரப்படும். பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஒருநாள் கூட கால தாமதம் ஏற்படாது. குறிப்பிட்ட தேதியில் இரண்டே மணித்துளிகளில் எஸ்.எம்.எஸ். மூலம் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். 

மேலும், கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்தக்கூடாது. வகுப்பு நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு முதலில் அறிவுரை வழங்கப்படும். மீறி வகுப்பு நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என அவர் கூறினார். 



இதனைத்தொடர்ந்து, பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறுகையில், "11 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கி இருக்கின்றது. 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கிலும் நியாய தராசு வரும். பொருத்து இருந்து பார்க்கலாம். திவாகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர்தான் முடிவு செய்ய வேண்டும். அ.தி.மு.க., இயக்கம் ஆலமரம் போன்றது. டிடிவி தினகரன் கட்சியில் அனைவரையும், கட்சியில் இருந்து அவரே வெளியே அனுப்பி விடுவார்," என்றார். 

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...