கள் இறக்கும் பானைகளை உடைக்கும் போலீசாரை கண்டித்து மறியல் போராட்டம் : தற்கொலைக்கு முயன்ற விவசாயி

திருப்பூர் : திருப்பூர் அருகே தோட்டங்களில் கள் இறக்கப் பயன்படுத்தும் பானைகளை போலீசார் அடித்து உடைத்த சம்பவத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளைத் தரக்குறைவாக பேசியதால், பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலைக்கு முயன்றார்.

திருப்பூர் : திருப்பூர் அருகே தோட்டங்களில் கள் இறக்கப் பயன்படுத்தும் பானைகளை போலீசார் அடித்து உடைத்த சம்பவத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளைத் தரக்குறைவாக பேசியதால், பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலைக்கு முயன்றார். 



பல்லடத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாய தோட்டங்களில் கள் இறக்குவதாக தகவல் கிடைத்ததையடுத்து, கடந்த சில தினங்களாக பல்லடம் போலீசார், கள் இறக்கப் பயன்படுத்தும் பானைகளை உடைத்தும், பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து, பல்லடம் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு வந்த பல்வேறு விவசாய சங்கத்தினர், முற்றுகையிட்டு கள் இறக்க அனுமதி வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இதனிடையே, இன்றும் பல்வேறு பகுதி தோட்டங்களில் கள் இறக்கக் கட்டியிருந்த பானைகளை போலீசார் அடித்து நொறுக்கினர். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் காட்டூர் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சம்பவ இடத்தில் இருந்த போலீசார், விவசாயிகளை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த மகேஷ் என்ற விவசாயி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.



இதனைப் பார்த்த அருகில் இருந்த விவசாயிகள் உடனடியாக அவரை மீட்டு பொங்கலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக பல்லடம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பல்வேறு, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களுக்கு பிறகும், கள் இறக்க தொடர்ந்து போலீசார் அனுமதி மறுப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...