கள் இறக்கும் பானைகளை உடைக்கும் போலீசாரை கண்டித்து மறியல் போராட்டம் : தற்கொலைக்கு முயன்ற விவசாயி

திருப்பூர் : திருப்பூர் அருகே தோட்டங்களில் கள் இறக்கப் பயன்படுத்தும் பானைகளை போலீசார் அடித்து உடைத்த சம்பவத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளைத் தரக்குறைவாக பேசியதால், பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலைக்கு முயன்றார்.

திருப்பூர் : திருப்பூர் அருகே தோட்டங்களில் கள் இறக்கப் பயன்படுத்தும் பானைகளை போலீசார் அடித்து உடைத்த சம்பவத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளைத் தரக்குறைவாக பேசியதால், பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலைக்கு முயன்றார். 



பல்லடத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாய தோட்டங்களில் கள் இறக்குவதாக தகவல் கிடைத்ததையடுத்து, கடந்த சில தினங்களாக பல்லடம் போலீசார், கள் இறக்கப் பயன்படுத்தும் பானைகளை உடைத்தும், பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து, பல்லடம் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு வந்த பல்வேறு விவசாய சங்கத்தினர், முற்றுகையிட்டு கள் இறக்க அனுமதி வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இதனிடையே, இன்றும் பல்வேறு பகுதி தோட்டங்களில் கள் இறக்கக் கட்டியிருந்த பானைகளை போலீசார் அடித்து நொறுக்கினர். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் காட்டூர் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சம்பவ இடத்தில் இருந்த போலீசார், விவசாயிகளை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த மகேஷ் என்ற விவசாயி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.



இதனைப் பார்த்த அருகில் இருந்த விவசாயிகள் உடனடியாக அவரை மீட்டு பொங்கலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக பல்லடம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பல்வேறு, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களுக்கு பிறகும், கள் இறக்க தொடர்ந்து போலீசார் அனுமதி மறுப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...