கோவையில் விற்பனையாகும் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் மலையாள மொழி: பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு

கோவை: கோவையில் விற்பனை செய்யப்படும் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் மலையாள எழுத்து அச்சிடப்பட்டிருப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் விற்பனை செய்யப்படும் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் மலையாள எழுத்து அச்சிடப்பட்டிருப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆவின் நிறுவனமானது தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். பால் வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் பால், தயிர், நெய் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவனம், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அரை லிட்டர் தயிர் பாக்கெட்டை ரூ.25-க்கு அறிமுகப்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம், கோவையிலும் இந்த தயிர் பாக்கெட்டுகள் அறிமுகமானது.



மலையாளம்

இதில் அரை லிட்டர் மஞ்சள் நிற தயிர் பாக்கெட்டில் 'ஆவின் தயிர்' என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

அதேபோல "கெட்டித் தயிர்" என்றும் மலையாளத்திலும் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், ஆவினின் மற்ற எந்தப் பொருள்களிலும் மலையாள எழுத்துகள் இல்லை.

இது குறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "கோவையில் மலையாளிகள் அதிகமாக இருப்பதால் அவர்களைக் கவர மலையாளத்தை அச்சிட்டுள்ளோம்.

கோவையில் முதற்கட்டமாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். அடுத்தகட்டமாக, மற்ற ஆவின் பொருட்களிலும் மலையாள எழுத்துகளை அச்சிடுவோம்." என்றார். 

இது தொடர்பாக உலகத்தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் கூறுகையில், "கோவையில் ஆவின் பால் பைகளில் மலையாள எழுத்துகள் பதிவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்தில் ஆவின் பால் பைகளில் தமிழில் தான் எழுத வேண்டும். இதில் மலையாளத்தில் குறிப்பிடுவது என்பது தமிழர்களை அவமதிக்கும் போக்கு. இது உடனடியாக மாற்றப்பட வேண்டும்." என்றார்.



தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர்.த.வேல்முருகன் கூறுகையில், "கேரளாவில் அட்டப்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். கேரளாவில் மாநில அரசால் நடத்தப்படும் பால் பாக்கெட்டுகளில் மலையாள மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழுக்கும் கொடுக்கட்டும். அங்கும் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அவர்கள் வாங்கும் பால் பாக்கெட்டுகளில் தமிழ் எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருந்தால், இங்கு வாழும் மக்களுக்காக மலையாள மொழி இடம் பெறுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணயமும் இல்லை.



அதற்கான உத்தரவாதத்தை கேரள அரசிடம் பெற்று நடைமுறை படுத்திவிட்டு பிறகு மலையாள எழுத்துக்களை அச்சிடட்டும்.

ஆனால், தமிழகத்தில் மட்டும் மாற்று மொழிகளை தமிழர்கள் மீது திணிப்பது என்பது ஜனநாயகத்திற்கு முரணானது.

இங்கு இருக்கும் அதிகாரிகள் அவரவர் துறைகளில், அவர்களின் மொழிக்கும், இனத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது தமிழ் நாட்டிற்கு செய்யும் பச்சை துரோகம். தமிழக மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி தமிழுக்கு எதிராக செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன்." என்றார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் கூறுகையில், "ஆவின் நிறுவனம் தமிழக மக்களின் நலனுக்காக உருவான நிறுவனம். ஆனால், இந்த ஆவின் நிறுவனத்தில் மலையாள மொழிகள் திணிக்கப்படுவது உகந்தது அல்ல. ஏற்கனவே மத்திய அரசு இந்தியைத் திணிக்கும் கொடுமையில் செயல்பட்டு வரும் சூழலில், தற்போது தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனத்தில் மலையாளத்தைத் திணிப்பது மலையாள மொழியை ஊக்கப்படுத்தும் செயல்.

ஆவின் நிறுவனம் உடனடியாக மலையாளத்தில் அச்சிட்டு வரும் தயிர் பாக்கெட் விற்பனையை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடுமையான போராட்டங்களை தந்தை பெரியார் திராவிடர் கழகம் முன்னெடுக்கும்." என்றார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...