திருப்பூரில் பா.ஜ.க., கொடிக்கம்பத்தில் பறந்த அ.ம.மு.க., கொடியினால் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பா.ஜ.க., கொடிக்கம்பத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டதால் ஏராளமான பா.ஜ.க., தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பா.ஜ.க., கொடிக்கம்பத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டதால் ஏராளமான பா.ஜ.க., தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்டம் முழுவதும் மே தினம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இளங்கோ நகர் பகுதியிலும் மே தினம் கொண்டாடப்பட்டது. ஆனால், பா.ஜ.க., கொடிக் கம்பத்தில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள், அக்கட்சியின் கொடியினை கழற்றி அருகிலுள்ள சாக்கடையில் போட்டுவிட்டு, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொடியினை ஏற்றியுள்ளனர். இதனைக் கண்ட பா.ஜ.க.,வினர், இளங்கோ நகர் பகுதியில் முற்றுகையிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க., கொடிக் கம்பத்தில் அ.ம.மு.க., கொடியேற்றியதைக் கண்டித்தும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.



பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கட்சியினரிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...