மேட்டுப்பாளையத்தில் பெய்த கன மழையால் தென்னை, வாழை மரங்கள் சேதம்

கோவை : மேட்டுப்பாளையத்தில் நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த கன மழை காரணமாக தென்னை மற்றும் வாழை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்து சேதமடைந்தன.

கோவை : மேட்டுப்பாளையத்தில் நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த கன மழை காரணமாக தென்னை மற்றும் வாழை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்து சேதமடைந்தன. 

மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தினசரி மாலை நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில், நேற்றிரவு பத்து மணிக்கு மேல் வழக்கம் போல் மழை பெய்ய தொடங்கியது. சற்று நேரத்தில் மழையுடன் பலத்த காற்றும் வீசியது. 

சற்று நேரத்தில் மழையின் அளவு குறைந்த போதிலும் காற்றின் வேகம் அதிகரித்தது. இடி மின்னலுடன் சூறாவளி போல் வீசிய காற்றின் வேகத்தில் சிக்கி மேட்டுப்பாளையத்தில் உள்ள கெம்மாரம்பாளையம், கண்டியூர் உள்ளிட்ட கிராமங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானதோடு நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் வேரோடு சரிந்து மண்ணில் விழுந்தன. 

மேலும், தோட்டங்களில் இருந்த மாமரங்கள், பப்பாளி மரங்கள், சோளப்பயிர்கள் என அனைத்தும் சாய்ந்தன. தோட்டத்து வீடுகளில் இருந்த கூரைகள் பீய்ந்து ஓடுகள் காற்றில் பறந்தன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாரான வாழை மரங்களும், ஏழாண்டுகளுக்கும் மேல் வளர்ந்து காய் பிடிக்கும் பக்குவத்திற்கு வந்த உயரமான தென்னை மரங்களும் மண்ணில் கிடப்பதை இன்று காலை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தள்ளனர். 

இயற்கை சீற்றத்தால் சேதமடைந்த தங்களது விவசாய பயிர்களுக்கு இழப்பீடு வழங்கினால் மட்டுமே இனி விவசாயத்தை தொடர இயலும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...