குட்கா விவகாரத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்பு உள்ளது : கோவையில் ஸ்டாலின் பேட்டி

கோவை : குட்கா விவகாரத்தில் கைதாகி கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்ட தி.மு.க தொண்டர்களை அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சிறைக்கு சென்று சந்தித்தார்.

கோவை : குட்கா விவகாரத்தில் கைதாகி கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்ட தி.மு.க தொண்டர்களை அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சிறைக்கு சென்று சந்தித்தார். 

சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தயாரிக்கும் ஆலையில் கடந்த வாரம் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க தொண்டர்கள் அந்த ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இதில், 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் 7 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர். இது பழிவாங்கும் செயல் என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், கைதைக் கண்டித்து கோவையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். தொடர்ந்து மத்திய சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க தொண்டர்களை சந்தித்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குட்கா விவகாரத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி-க்கு தொடர்பு உள்ளது. நியாயமாக பார்த்தால் அமைச்சர் வேலுமணி , கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் மீதுதான் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். உண்மை வெளிவர போராடியதிற்கு தி.மு.க தொண்டர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்தது சர்வாதிகாரம் போன்றது. 

எனவும், குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சிறைக்கு செல்வதை மறைப்பதற்காக இதெல்லாம் நடக்கிறது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்தும். அடுத்து வரும் தி.மு.க ஆட்சியில் இவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். விஜயபாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள். தண்டனையில் இருந்து தப்பிக்க இது போன்ற பொய் வழக்குகளை தி.மு.க தொண்டர்கள் மீது பதிவு செய்து வருகின்றனர்" என்றார். 

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...