குட்கா விவகாரத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்பு உள்ளது : கோவையில் ஸ்டாலின் பேட்டி

கோவை : குட்கா விவகாரத்தில் கைதாகி கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்ட தி.மு.க தொண்டர்களை அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சிறைக்கு சென்று சந்தித்தார்.

கோவை : குட்கா விவகாரத்தில் கைதாகி கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்ட தி.மு.க தொண்டர்களை அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சிறைக்கு சென்று சந்தித்தார். 

சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தயாரிக்கும் ஆலையில் கடந்த வாரம் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க தொண்டர்கள் அந்த ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இதில், 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் 7 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர். இது பழிவாங்கும் செயல் என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், கைதைக் கண்டித்து கோவையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். தொடர்ந்து மத்திய சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க தொண்டர்களை சந்தித்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குட்கா விவகாரத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி-க்கு தொடர்பு உள்ளது. நியாயமாக பார்த்தால் அமைச்சர் வேலுமணி , கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் மீதுதான் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். உண்மை வெளிவர போராடியதிற்கு தி.மு.க தொண்டர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்தது சர்வாதிகாரம் போன்றது. 

எனவும், குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சிறைக்கு செல்வதை மறைப்பதற்காக இதெல்லாம் நடக்கிறது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்தும். அடுத்து வரும் தி.மு.க ஆட்சியில் இவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். விஜயபாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள். தண்டனையில் இருந்து தப்பிக்க இது போன்ற பொய் வழக்குகளை தி.மு.க தொண்டர்கள் மீது பதிவு செய்து வருகின்றனர்" என்றார். 

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...