கோவையில் குடும்பப் பிரச்சனை காரணமாக பெண் காவலர் தற்கொலை

கோவை: குடும்பப் பிரச்சினை காரணமாக கோவையைச் சேர்ந்த பெண் காவலர் பிரியா தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: குடும்பப் பிரச்சினை காரணமாக கோவையைச் சேர்ந்த பெண் காவலர் பிரியா தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியா (29). இவர், கணவர் பெயர் நவநீதகிருஷ்ணன். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பிரியாவின் கணவர் கிடைக்கும் பணிகளுக்கு செல்வது வழக்கம். கடந்த 2013-ம் ஆண்டு பிரியா ஏ.ஆர். போலீசில் பணியில் இணைந்தார். இவர், தற்போது ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில வருடங்களாகப் பிரியாவும், அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களது குழந்தைகளை பிரியாவின் தாயார் கவுண்டம்பாளையத்தில் உள்ள அவர்களது வீட்டில் வைத்துப் பராமரித்து வருகிறார்.



இதில், பணியின் நிமித்தம் காவல்துறை குடியிருப்பில் பிரியா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் இரவு பணி முடிந்து வந்த காவலர் பிரியா, இன்று திடீரென தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர், ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர், இறந்து போன பிரியாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கோவையில் பெண் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...