கோவையில் குடும்பப் பிரச்சனை காரணமாக பெண் காவலர் தற்கொலை

கோவை: குடும்பப் பிரச்சினை காரணமாக கோவையைச் சேர்ந்த பெண் காவலர் பிரியா தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: குடும்பப் பிரச்சினை காரணமாக கோவையைச் சேர்ந்த பெண் காவலர் பிரியா தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியா (29). இவர், கணவர் பெயர் நவநீதகிருஷ்ணன். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பிரியாவின் கணவர் கிடைக்கும் பணிகளுக்கு செல்வது வழக்கம். கடந்த 2013-ம் ஆண்டு பிரியா ஏ.ஆர். போலீசில் பணியில் இணைந்தார். இவர், தற்போது ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில வருடங்களாகப் பிரியாவும், அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களது குழந்தைகளை பிரியாவின் தாயார் கவுண்டம்பாளையத்தில் உள்ள அவர்களது வீட்டில் வைத்துப் பராமரித்து வருகிறார்.



இதில், பணியின் நிமித்தம் காவல்துறை குடியிருப்பில் பிரியா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் இரவு பணி முடிந்து வந்த காவலர் பிரியா, இன்று திடீரென தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர், ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர், இறந்து போன பிரியாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கோவையில் பெண் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...